உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22.61 கோடியைத் தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 46.52 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்ததை அடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 226,610,819 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 4,661,443 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். எனினும் 203,302,829 பேர் குணமடைந்துள்ளனர். 18,646,547 பேர் கொரோனா பாதிப்புடன் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
உலகிலேயே கொரோனாவால் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,287,957 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 682,338-ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,315,512-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 443,528 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,019,830 ஆக உயர்ந்துள்ளது.