தென்கிழக்கு சைபீரியாவில் உள்ள வனப்பகுதியில் நேற்று 14 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களுடன் ஒரு சிறிய ரஷ்ய பயணிகள் விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 4 பேர் உயிரிழந்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

இர்குட்ஸ்க் நகரிலிருந்து புறப்பட்ட எல் -410 விமானம் கசசின்கோய் கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில் தரையிறக்கப்பட்டது என்று விசாரணை குழு சட்ட அமலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட அறிக்கையின்படி, விமானத்தின் உபகரணங்கள் செயலிழந்துவிட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த விமானம் தரையிறங்கும் காட்சி என்று கூறப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.

இதனைப்படிக்க: திமுகவின் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா: என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.