மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் EQC 400 எலக்ட்ரிக் சொகுசு காருக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இது இரண்டாவது பேட்ச் கார்களுக்கான முன்பதிவு. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த காரின் முதல் பேட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மூன்றே மாதத்தில் அந்த கார்கள் விற்பனையான நிலையில் இரண்டாவது பேட்ச் கார்களுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக 13 நகரங்களில் மட்டுமே விற்பனையான இந்த கார் இப்போது இந்தியாவில் 50 நகரங்களில் முன்பதிவு செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் சொகுசு கார் விற்பனையில் முதன்முதலில் இறங்கியதும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தான். நான்கு விதமான டிரைவ் மோடுகள். ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும். அதிகபட்சம் 180 கிலோ மீட்டர் வேகம். 5.1 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகம் பிக்கப் என சிறப்பம்சங்களில் இந்த கார் அசத்துகிறது. Audi மற்றும் ஜாகுவார் கார்களுக்கு இந்த கார் போட்டியாக விளங்கி வருகிறது.