சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
தமிழக சட்டசபையில் நேற்று 2021-2022-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சட்டசபையில் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
பொது பட்ஜெட்டைப் போலவே வேளாண்மைத் துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொது பட்ஜெட்டைப் போலவே வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM