டெல்லியில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் இன்றுவரை 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 74 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 26 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள மொத்தம் 2 கோடி மக்கள்தொகையில், 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்க்கு தகுதியானவர்கள். எனவே, இந்த 1.5 கோடி மக்களில் சுமார் 74 லட்சம் மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். இது டெல்லியின் மொத்த மக்கள் தொகையில் 50% ஆகும்” என தெரிவித்தார்