தங்களது ‘ரெட் லிஸ்ட்’ பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது சவூதி அரேபிய அரசவை. இந்த தடையை மீறி பயணம் மேற்கொண்டால் சம்மந்தப்பட்டவர் மூன்று ஆண்டு காலம் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு எனத் தெரிகிறது.  

அந்த நாட்டின் ரெட் லிஸ்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், அமீரகம், எகிப்து மாதிரியான நாடுகள் இடம் பெற்றுள்ளன. 

மக்கள் யாரேனும் இந்த நாடுகளுக்கு சென்று திரும்பி இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.