கொரோனா தாக்கம் இருப்பதாக கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீர் எருமை இறைச்சியை கம்போடியா பறிமுதல் செய்தது.
ஐந்து கண்டெய்னரில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீர் எருமை இறைச்சிகளை கம்போடிய அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின்னர், இந்த இறைச்சிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து நீர் எருமை இறைச்சி இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து கப்பல் கண்டெய்னர்களில் மூன்றில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதாக கம்போடிய நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியது, மேலும் மூன்று கொள்கலன்களில் உள்ள இறைச்சிகளும் இந்த வாரத்தின் பிற்பகுதியில் அழிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.