மதுரையில் ஆலமரத்திற்கு 102-வது பிறந்தநாளையொட்டி பொதுமக்கள் கேக்வெட்டி கொண்டாடினர்.

மதுரை மீனாட்சிபுரம் கண்மாய்க்கரை பகுதியில் 7-க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்த நிலையில், ஒரேஒரு ஆலமரம் மட்டும் நூற்றாண்டை கடந்தும் இருந்து வருகிறது. இந்நிலையில் நூற்றாண்டை கடந்த ஆலமரத்தை பாதுகாக்கக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, ஆண்டுதோறும் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர்.

image

இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 102-வது பிறந்தநாளான இன்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கேக்வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

image

இதனையடுத்து நாட்டு இன மரங்களை பாதுகாக்கும் வகையில் சிறுவர்களுக்கு ஆலமரக்கன்றுகளை வழங்கி அதனை கண்மாய்க் கரைகளில் நடவைத்தனர். மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும், ஆக்சிஜனை வழங்கும் ஆலமரத்திற்கு மனிதர்களை போன்று பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்களின் மனங்களுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.