திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் பால் சந்திரமோகன். அவரிடம் படிக்கும் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் ஐந்து பேர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் நடந்து கொள்ளும் முறையை ஐந்து பக்கத்திற்குக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தில்.”பால் சந்திரமோகன் சார் ரொம்ப மோசமான முறையில் நடந்துகொள்வார். நாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடந்து போவார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வார். இரட்டை அர்த்தத்தில் பேசும் படி சொல்வார் என பல குற்றச்சாட்டுகளை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பால் சந்திரமோகன்

மேலும் அந்தக் கடிதத்தில், `அதே தமிழ்த் துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து, “பால் சாரை பார்க்கப் போகையில் முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும்” என்று வற்புறுத்துவார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் குழு உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி, தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர்.

திருச்சி போலீஸார்

இதைத்தொடர்ந்து பால் சந்திரசேகரைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க ஒரு குழுவையும் நியமிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது கல்லூரி நிர்வாகம். இதுகுறித்து போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம்.”இவ்விவகாரம் சம்பந்தமாக ஏடிசி (அடிஷ்னல் டெபுடி கமிஷனர்) வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.