மே மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹீமை தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி). மே மாதத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி இருந்தார். அதில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 84 ரன்களும், இரண்டாவது போட்டியில் 125 ரன்களையும் அவர் எடுத்திருந்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 237 ரன்கள் குவித்திருந்தார் அவர். 

அதன் மூலம் வங்கதேச அணி இலங்கைக்கு எதிராக முதல்முறை ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மே மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே போல மகளிர் கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்து நாட்டு கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கேத்ரின் ப்ரயஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.