கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளின் கால்பந்தாட்ட அணிகள் விளையாடும் யூரோ கோப்பை தொடரிலிருந்து போர்ச்சுகல் வீரர் ஜோயோ கன்செலோ (Joao Cancelo) விலகி உள்ளார். இதனை அந்த நாட்டின் கால்பந்தாட்ட கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவருக்கு மாற்றாக டியாகோ டலோட் (Diogo Dalot) அணியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ கோப்பையின் நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் அணிக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது. ஜோயோ கன்செலோ (Joao Cancelo) சிறந்த தடுப்பட்ட வீரர் ஆவார். அதே நேரத்தில் விங்கராகவும் விளையாடுவார். பந்தை டிரிஃபிள் செய்வதில் அவர் வல்லவர்.
யூரோ கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் மேலும் சில நாடுகளை சேர்ந்த வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.