பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்ற நபர், அச்சத்தில் மயங்கி விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஊசி போட்டுக் கொள்வது என்பது பெரும்பாலானோருக்கு அச்சமாகவே உள்ளது. இந்நிலையில், ஆஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்காக, maguila என்பவர் தடுப்பூசி மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊசி போட்டுக் கொள்வதற்கு முன்பு பதற்றத்துடனே இருந்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்த செவிலியர் தடுப்பூசி போட்டவுடன், பதற்றம் காரணமாக மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு தண்ணீர் கொடுத்து மருத்துவர்கள் எழுப்பி விட்டனர். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.