ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அந்த பட்டியலில் முதல் முறையாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட ஐந்து வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் (20), கிருஷ்ணப்ப கவுதம் (32) தேர்வாகி உள்ளனர். இதில் படிக்கல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காகவும், கிருஷ்ணப்ப கவுதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது சேட்டன் சக்காரியா, நிதிஷ் ராணா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்களும் முதல்முறையாக இந்தியா அணியில் இடம் பெற்றுள்ளனர். அதே போல தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வருண் சக்கரவர்த்தி அறிமுக வீரராக இந்த தொடரில் களம் இறங்க உள்ளார்.
இந்த அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் அசத்தலாக விளையாடியதன் மூலம் அணியில் இடம் பெற்றுள்ளனர்.