ஏற்கனவே திருமணமான ஒருவர், திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ்வது சட்டப்படி அனுமதிக்கப்படாத ஒன்று என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த ஹேமந்த் சிங் ரத்தோர் என்பவரும் அவருடன் இணைந்து வாழ்ந்துவரும் பெண்ணும் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பங்கஜ் பந்தாரி, ஹேமந்த் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் பாதுகாப்பு வழங்கமுடியாது என்றும், ஏற்கனவே திருமணமான ஒருவர் திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ்வது அனுமதிக்கப்படாத ஒன்று என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் இது போன்ற வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருமணம் செய்ய உகந்த வயதை அடைந்தவர்கள், ஏற்கனவே திருமணமாகாதவர்களுடன் மட்டுமே இணைந்து வாழமுடியும் என கூறியதை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.