கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்தபோது தனது தந்தை மோகன் பாஸ்வானை சைக்கிளில் அழைத்து வந்தவர் ஜோதி குமாரி. டெல்லியிலிருந்து தங்கள் சொந்த கிராமமான பீகாரில் உள்ள சிர்ஹுல்லி கிராமத்திற்கு 1200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து அழைத்து வந்தார் அவர். அதனால் அவர் தேசிய அளவில் கவனமும் பெற்றார்.
தந்தை மீது எல்லையற்ற அன்பு கொண்டவர் ஜோதி குமாரி. இந்நிலையில் அவரது தந்தை மோகன் பாஸ்வான் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி அந்த கிராமம் முழுவதும் பரவிய நிலையில் ஒட்டுமொத்த கிராமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
ஜோதி குமாரியின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் மற்றும் வெப் சீரிஸும் தயாராகி வருகிறது. பிரதமர் மோடியும் ஜோதி குமாரியுடன் உரையாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.