தென்னாப்ரிக்காவில் சுமார் 35 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 33 வயது குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை வரவேற்றுள்ளது தென்னாப்பிரிக்க நாட்டு காவல்துறை. இந்த 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது ஐந்து ஆயுள் தண்டனையும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை அநாட்டின் பிரிட்டோரியா உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

கடந்த 2014 முதல் 2019 வரையில் தென்னாப்பிரிக்கா நாட்டில் சுமார் 36 வீடுகளை இரவு நேரங்களில் உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளான் அந்த கொடூர குற்றவாளி. அதோடு 35 பெண்களை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பாலியல் வனகொடுமை செய்துள்ளான். 

காவல் துறை சார்பில் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளி குற்றம் செய்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தின் முன் சமர்பித்து தண்டனை வாங்கி கொடுத்தமைக்காக விசாரணை அதிகாரி கேத்தரினுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.