ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் வரும் டிசம்பர் இறுதிக்குள் சுமார் 15.6 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்துள்ளதாகவும், இந்திய சந்தைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும்  நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

image

மேலும் அவர், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் இந்த வருட டிசம்பர் இறுதிக்குள் சுமார் 15.6 கோடி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எனவும் இதற்காக டாக்டர். ரெட்டீஸ் லேப் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வி.கே.பால் கூறினார்.

ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துக்கு 91.6 சதவிகித கொரோனா தடுப்பாற்றல் உள்ளது. இதுவரை செய்யப்பட சோதனைகளில் எல்லாம் இந்த ஸ்புட்னிக் வி பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி வருகையால் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.