இங்கிலாந்து நாட்டின் கார் டீலர்ஷிப் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்த ஊழியர் ஒருவரை அந்நிறுவனம் மாதந்தோறும் நடைபெறும் அலுவலக உணவு விருந்துக்கு அழைக்க தவறியதால் அதற்கு ஈடாக 23 லட்ச ரூபாயை வழங்கி உள்ளது. இந்த தொகையை நீதிமன்றத்தில் முறையிட்டு பெற்றுள்ளார் அந்த ஊழியர்.
பெரும்பாலும் ஊழியர்கள் பிட்சா, மீன், சிப்ஸ் மாதிரியான உணவுகளை ஆர்டர் செய்வார்களாம். இந்த விருந்தை பிட்சா விருந்து என அழைப்பது வழக்கம்.
மல்கோர்சாட்டா லெவிகா என்ற அந்த ஊழியர் அந்நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியாற்றி உள்ளார். அவருக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்துள்ளனர் மேலதிகாரிகள். அதுகுறித்து அவர் புகார் அளித்ததும் வேலை நேரத்தில் மாற்றம் செய்வது, ஊதியத்தை பிடிப்பது, அலுவலக விருந்துகளில் தவிர்த்தும் வந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தை முறையிட்டுள்ளார். அங்கு நடைபெற்ற விசாரணையில் அலுவலகம் அவரை திட்டமிட்டு விருந்தில் பங்கேற்பதை தவிர்த்தது தெளிவானது. அதற்கு ஈடாக தான் அவருக்கு 23 லட்ச ரூபாயை அவர் பணியாற்றிய நிறுவனம் கொடுக்க நீதிமன்றம் நிர்பந்தித்துள்ளது.