கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியா அதிலிருந்து மீள்வது சவாலான காரியமாக எழுந்துள்ள நிலையில், அதற்குள் அடுத்த சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் சுமார் 23 கோடி பேர் நாள் ஒன்றுக்கு 375 ரூபாய் தான் ஈட்டுகின்றனர் என ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு எழுந்த கொரோனாவின் முதல் அலைக்கு பின்னதாக பொருளாதாரத்தில் லேசான முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் தற்போது நிலவும் கொரோனா சூழல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் வறுமையினால் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அசிம் பிரேம்ஜி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், வருமானம் குறைவு மாதிரியானவை இந்தியாவில் வறுமை அதிகரிக்க காரணமாக அமைவதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.