“பா.ரஞ்சித் மீதான தனிப்பட்ட விமர்சனம் தவறு” – நீலம் பண்பாட்டு மையத்தின் ட்வீட்டும் எதிர்வினைகளும்
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் என்கிற அமைப்பை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய ஒரு பதிவு வெளியிடப்பட்டது. “இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியினருக்கும் நீதியையும் சமத்துவத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொண்டுவர முடியுமா? மோசமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியாவில், அம்பேத்கரியத்தால் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும். கம்யூனிஸ்ட்கள் உயர் சாதியினருக்கானவர்கள்” என்பதுதான் அந்த ட்வீட். ட்விட்டர் கருத்து இப்படியொரு ட்வீட் வெளியானதைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியினர்,…