நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ’வழக்கு எண் 18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ உள்ளிட்டப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை மனிஷா யாதவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ”கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், விரைவில் மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை எதுவும் மோசமாக இல்லை. ஆனால், எப்போதாவது லேசாக மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. கொரோனாவை மொத்தமாக் தாண்டி வருவதே சிறந்தது” என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.