போக்குவரத்து காவலர் நடுரோட்டில் வைத்து ஒரு நபரை தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் நடுரோட்டில் வைத்து பொதுநபர் ஒருவரை கொடூரமான முறையில் தாக்குகிற வீடியோ க்ளிப் ஒன்றை ஹர்ஷா உதகண்டா என்ற நபர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் எந்தப் பகுதியில் நடந்தது என்பதுபோன்ற விவரங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் இந்த வீடியோவை இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காவலரின் செய்கைக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.