அடுத்த சில நாட்களில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் 2021 சீசனுக்கு புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது பிசிசிஐ. அதன்படி சாப்ட் சிகினாலுக்கு தடை போட்டுள்ளது. அதே நேரத்தில் DRS முறையில் அம்பயர் கால் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஷாட் ரன் சர்ச்சை மற்றும் ஆட்ட நேரத்தை குறைக்கவும் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. 

அந்த வகையில் சாப்ட் சிக்னல் விவகாரங்களில் டிவி அம்பயர் தங்களுக்கு உள்ள அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி அதன் மூலம் இறுதி முடிவை எட்டலாம் என சொல்லப்பட்டது. இருந்தாலும் DRS முடிவுகளில் அம்பயர் கால்ஸ் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சாப்ட் சிக்னல் தொடர்பான சர்ச்சை எழுந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் ஷார்ட் ரன் மற்றும் நோ பால் தொடர்பான முடிவுகளிலும் மூன்றாவது அம்பயர்கள் குறுக்கிடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. ஆட்டத்தின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.