திண்டிவனம் அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை. சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

திண்டிவனம் அடுத்த எறையானூர் கிராமத்தை சேர்ந்த மகாதேவன் என்பவரின் மகன் ராமஜெயம் என்ற அருணாச்சலம் (18). இவர், அதே பகுதியை சேர்ந்த பாவாடைராயன் என்பவரின் மகள் அபிநயாவை (16). கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் அண்ணன் தங்கை உறவு என்பதால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து இருவரும் தலைமறைவாகினர்.

image

இந்நிலையில், திண்டிவனம் அடுத்துள்ள கருணாவூர் வயல்வெளி பகுதியிலுள்ள புளியமரத்தில் துப்பட்டாவில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்த ராமஜெயம் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் அடித்து கொலை செய்து மரத்தில் தொங்க விட்டு விட்டனர் என அவரது உறவினர்கள் இன்று காலை முதல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சந்தேக நபர்கள் மீது புகார் அளித்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து ராமஜெயம் தாயார் நிர்மலா (45) என்பவர், அதே பகுதி மற்றும் தென்பசார் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்தவர்கள் மீது மாலை வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஜக்காம் பேட்டையில் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.