இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியா அதனால் பேட் செய்தது. தவான் மற்றும் ரோகித் ஷர்மா இணையர் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் இணைந்து 103 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 


இருந்தாலும் அதற்கு பிறகு இந்திய அணி 54 ரன்கள் சேர்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது. ரோகித், தவான், கோலி மற்றும் ராகுல் என வரிசையாக இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வீழ்ந்தனர். இதில் கோலி மற்றும் ராகுல் ஒற்றை இலக்க ரங்கலைல அவுட்டாகினர். அதன் மூலம் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளது. 


சர்வதேச கிரிக்கெட் களத்தில் கோலியை இரண்டு முறை போல்ட் செய்த பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் மொயின் அலி. இந்த போட்டியிலும் அவர் கோலியை போல்ட் செய்தார். 


தற்போது பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். 30 ஓவர் முடிவுக்கு இந்தியா 206 ரன்களை 4 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. எஞ்சியுள்ள 20 ஓவர்கள் முழுவதும் இந்தியா விளையாடினால் தான் இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்க முடியும். இந்த போட்டியை வெல்லும் அணி தொடரையும் கைப்பற்றும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.