டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நிச்சயமாக ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. ஊரடங்கு குறித்து எந்தத் திட்டமும் இல்லை. கடந்த ஆண்டு கொரோனா பரவியபோது ஊரடங்கு விதிக்கப்பட்டதற்கு காரணம் இருந்தது. யாருக்கு அந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்று தெரியாது. நீங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் 21 நாட்களுக்கு மூடினால் வைரஸ் பரவுவது நிறுத்தப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, ஊரடங்கை அறிவித்தோம். ஆனால், வைரஸ் பரவுவது நீங்கவில்லை. எனவே, கொரோனாவுக்கு ஊரடங்கு நிச்சயம் தீர்வல்ல.

image

இது ஒரு தொடர்ச்சியான நோய் என்றும், உடனடியாக இது முடிவடையாது என்றும் மருத்துவ நிபுணர்கள் எங்களுக்கு முன்னரே தெரிவித்தனர். எனவே, நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். எனவே தகுதியுடைவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொள்ளுங்கள்” என்று சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.