‘விஜய் 65’ படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்துக்காக இன்னொரு பிரபல நாயகி ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ராஷ்மிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றதாக தகவல் வெளியானது.

நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் ‘விஜய் 65’ படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே இணைவதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பூஜா ஹெக்டேவின் ஸ்டைலான வீடியோவுடன் செய்தியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு அன்பறிவு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். பூஜா ஹெக்டே தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்து வருகிறார். ‘அல வைகுந்தபுரம்மலு’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தற்போது பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, ‘விஜய் 65’ படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டு ஹீரோயின்களில் ஒருவராகத்தான் பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு வேடமும் பூஜா ஹெக்டே ரோல் போல முதன்மைக் கதாபாத்திரம் என்பதால் தற்போது தயாரிப்பாளர்கள், ரஷ்மிகா மந்தனாவுடன் இந்தக் கதாபாத்திரத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுதொடர்பாக பட நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. ரஷ்மிகா மந்தன்னா ‘மிஷன் மஜ்னு’ என்ற படம் மூலம் இந்தியில் கால்பதித்துள்ளார். அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் 67-ஐ கைப்பற்ற நினைக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்!

தெலுங்கு திரையுலகில் தற்போது டாப் தயாரிப்பாளர் என்றால், அது தில் ராஜு என்பவர் தான். அங்கிருக்கும் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் அவர் படம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது தில் ராஜு விஜய் படம் ஒன்றை தயாரிக்க விரும்புகிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் உடன் தனது 65-வது படத்தில் இணைந்துள்ள நிலையில், 66-வது படத்தை ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 67-வது படத்தை கைப்பற்ற தில் ராஜு திட்டமிட்டு இதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி விஜய் ஒப்புக்கொண்டால் அதை ‘பான் இந்தியன்’ படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார். பான் இந்தியா ஃபிலிம் என்பது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அனைத்து முன்னணி மொழிகளிலும் தயாரிக்கப்படும் திரைப்படம் ஆகும்.

“தில் ராஜு தென்னிந்திய திரைத்துறையின் ஒவ்வொரு முக்கிய ஆளுமைகளுடன் பணியாற்ற விரும்புகிறார். தில் ராஜு விஜய்க்கு ஒரு மெகா பான் தென்னிந்திய படம் வைத்திருக்கிறார். இதற்காக விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், ‘விஜய் 67’ தில் ராஜு தயாரிப்பதாக இருக்கும். மற்ற விவரங்கள் இப்போதைக்கு வெளியில் சொல்ல முடியாது” என்று தில் ராஜு தரப்பைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் ‘பிங்க் வில்லா’ செய்தி நிறுவனத்திடம் பேசியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.