அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பு. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில்கூட போட்டியிடலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் நீண்ட இழுபறிக்கு பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலை விடவும் குறைவான தொகுதிகளை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி “அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பு. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில்கூட போட்டியிடலாம் “ என்று தெரிவித்தார்