உத்தரப்பிரதேசம்: தாக்கப்பட்ட கணவன்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்!
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று மாலை தனது கணவருடன், உறவினரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று நபர்கள், தம்பதியினரைத் தடுத்து நிறுத்தினர். அவர்களைத் தாக்கி அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் இழுத்துச்சென்றிருக்கின்றனர். பாலியல் வன்கொடுமை அங்கு கணவனின் கண்முன்னே, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களை விடுவிப்பதற்கு முன்னர், அவர்களிடம் இருந்த பணம், நகை அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். அதோடு, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ…