தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். தென்காசி மற்றும் நெல்லை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். அப்போது அடைக்கலப்பட்டினத்தில் அமைந்துள்ள தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி தேநீரை ருசித்து விட்டு சென்றார் அவர்.
அது இப்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தேநீரை குடித்தபடி சுற்றியுள்ள மக்களிடம் பேசிய ராகுல், குடித்து முடித்த பிறகு தனக்கு தேநீர் தயாரித்த மாஸ்டரின் தோளில் கையை போட்டுக்கொண்டு “தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது” என தமிழில் பேசி சர்ப்ரைஸ் கொடுத்தார்.
On the campaign trail in Tamil Nadu, @RahulGandhi ji makes a quick stop at Murugesan’s tea stall in Adaikilapattanam for the best tea. ❤️ pic.twitter.com/0uZJkJCng7
— Ruchira Chaturvedi (@RuchiraC) February 28, 2021
அதோடு அவரது பெயரை கேட்டறிந்த ராகுல் “முருகேசன், நன்றி வணக்கம்” என சொல்லி விடை பெற்றார். அதோடு அங்கு குழுமியிருந்த மக்களிடத்திலும் கையை குலுக்கியபடி நகர்ந்தார் ராகுல் காந்தி.