புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் தேவையான நிலையில் காங் கூட்டணியின் பலம் 14 ஆக உள்ளது. இதனால் முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

image

புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 19 ஆக இருந்தது. பாகூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால் காங்.கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ்,ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் பலம் 14 ஆக குறைந்தது. பேரவையில் பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏ. தேவையான நிலையில் காங் கூட்டணியின் பலம் 14 ஆக உள்ளது. இதனால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.