கேரளாவின் கொச்சியில் 6 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோ ரசாயன தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு கேரளா சென்ற பிரதமர், கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், இந்த ஆலையால் மிகப்பெரிய அளவில் அன்னியச் செலாவணி மீதமாகும் எனத் தெரிவித்தார்.

மேலும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை ஏற்றிச்செல்லக்கூடிய சரக்கு கப்பல் போக்குவரத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இதன் பின் பேசிய பிரதமர், தாம் தொடங்கிவைத்த திட்டங்களால் நாட்டின் வளர்ச்சி விரைவடையும் என தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.