மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னையில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “மண்ணையும், மக்களையும், மொழியையும் காக்கவே நாம் களமிறங்கி இருக்கிறோம்” என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.