மும்பை மாநகரில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டிருந்த உள்ளூர் ரயில் சேவை 11 மாதங்களுக்கு பிறகு கடந்த 1 ஆம் தேதியன்று தொடங்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு தலை வணங்கி ஆசி பெற்று ஏறியுள்ளார். அந்த காட்சியை கேமிராவில் படம் பிடித்தவர் சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்ய அது வைரலாகி உள்ளது. 


“இந்த செயலின் சிறப்பையும், அழகையும் மும்பையை சேர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்” என ட்வீட் செய்துள்ளார் எழுத்தாளர் தேவ்தத் பட்நாயக். “இது தான் இந்தியாவின் ஆன்மா. ஒருபோதும் நாம் அதை இழக்கக்கூடாது என கடவுளை பிரார்த்திக்கிறேன்” எனதெரிவித்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.