விஜய் ஹசாரே கோப்பைக்காக தமிழ்நாடு அணியில் விளையாடுவதற்கு பிசிசிஐயின் அனுமதிக்காக காத்திருப்பதாக பந்துவீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பின்பு ஆஸ்திரேலியா தொடரின் இந்திய அணிக்காக விளையாடினார் நடராஜன். ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து பார்மட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடராஜன் சேர்க்கப்படவில்லை. இந்தத் தொடரிலிருந்து அவருக்கு ஓய்வளித்தது பிசிசிஐ.

image

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்த நடராஜன் “பிசிசிஐ அனுமதிக்காக காத்திருக்கிறேன். அவர்கள் அனுமதி கொடுத்தால் தமிழக அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவேன். இதுபோல சையத் முஷ்டக் அலி கோப்பையிலும் விளையாட விருப்பம் தெரிவித்தேன். ஆனால் பிசிசிஐ எனக்கு ஓய்வளித்தது.அதனால் என்னால் விளையாட முடியவில்லை” என்றார்.

image

மேலும் “தமிழ்நாடு அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடினாலும் சையத் முஷ்டக் அலி கோப்பைக்காக விளையாட வேண்டும். தமிழக அணியினருடன் இருக்க விரும்பினேன். இந்தக் கோப்பையை வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. தொடர் முழுவதுமே தமிழகம் சிறப்பாக விளையாடியது. அவர்களுக்கு இது மிகவும் முக்கியமான வெற்றி” என்றார் நடராஜன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.