ஒரு பெரியப்பாவாக இருந்து எம்.ஜி.ஆர் என்னை நன்றாக படிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அறிவுறுத்தினார் என்று ஸ்டாலின் கூறினார்.
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் இன்று மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அங்கு பேசிய அவர், ‘’ஆரணியில் இழப்பீடு கோரிய பெண்ணுக்கு உதவித்தொகை கிடைக்க திமுக நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதிமுக ஐடி பிரிவு திமுகவை குற்றஞ்சாட்டி தவறான தகவலை அளித்துள்ளது. பெண்ணுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை குறித்து நான் நிரூபிக்க தயார்; நிரூபிக்காவிடில் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அதேசமயம் அதிமுக ஐடி பிரிவு நிரூபிக்க தவறினால் அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்.
ஒரு பெரியப்பாவாக இருந்து எம்.ஜி.ஆர் என்னை நன்றாக படிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அறிவுறுத்தினார். முதல்வர் பழனிசாமி எம்.ஜி.ஆரை என்றாவது பக்கத்தில்சென்று பார்த்திருக்கிறாரா?’’ என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் ரயில் எஞ்சின் திருடியவனை விட்டுவிட்டு கரியை திருடியவன்மீது நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இது என்றும் குற்றம்சாட்டினார்.