இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ் ஆகியோர் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.

image

சென்னையில் இந்திய, இங்கிலாந்து அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் பணியாளர்களும் போட்டி நடுவர்களும் ஆறு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் சென்னைக்கு முன்பே வந்த பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ் ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்களும் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துக்கொண்டு இன்று முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதர இங்கிலாந்து வீரர்கள் பிப்ரவரி 2 முதல் பயிற்சியைத் தொடங்குவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்துள்ளது.

மேலும் இங்கிலாந்து வீரர்களுக்கு எடுக்கப்பட்ட இருமுறை கொரோனா பரிசோதனையிலும் நெகடிவ் என வந்துள்ளது. இதேபோல இந்திய வீரர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையிலும் நெகடிவ் என்றே வந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.