தேர்தல் வந்து விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டும் அல்ல, வேல் குத்தவும்கூட செய்வார், அம்மனுக்கு தீ கூட மிதிப்பார், தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் ஒரு நாளும் முதல்வராக முடியாது” என்றார். 

image

“குங்குமம் கொடுத்தால் அழிப்பது, விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது, இது போன்ற செயலை மக்களும் கடவுளும் ஏற்க மாட்டார்கள். தை பூசத்திற்கு விடுமுறை, அனைத்து மதத்தினருக்கும் தேவையான நலத்திட்டங்கள் செய்வதால் கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும், மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார்” எனக் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.