விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 ரியாலிட்டி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை கமல்ஹாசன் கலந்து கொள்ளும் பிக்பாஸ் ஷூட்டிங் சிறிது நேர தாமதத்துடன் நேரலையாக (Deffered Live) ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் டைட்டில் வென்ற ஆரிக்குப் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

பிக்பாஸ் கமல்

முன்னதாக நேற்றைய எபிசோடில் கடைசியாக இன்னொருவரும் எலிமினேட் ஆவார் எனத் தகவல்கள் கிளம்பின. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. கேப்ரியெல்லா ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் ஆரி, பாலா, ரியோ, சோம், ரம்யா பாண்டியன் ஆகிய ஐந்து பேரும் இறுதிப் போட்டியில் இருந்தார்கள்.

இவர்களில் மக்களிடமிருந்து ஆரிக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. எனவே அவரே டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்றைய நிகழ்ச்சியில் அதை முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.

பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்ஸ்

முதலிடம் ஆரிக்கு கிடைத்திருக்கிறது. சரி அடுத்தடுத்த இடங்கள்? நமக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின் படி ஆரிக்கு அடுத்த இடத்தில் பாலா ரன்னர் அப் ஆகத் தேர்வாகி உள்ளார்.

நேற்று முழுக்க சோகமாகவே இருந்த ரியோவுக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. முதலில் டைட்டில் வின்னராவார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் நான்காம் இடம்பெற்றார். இறுதிப்போட்டிக்குள் தட்டுத்தடுமாறி இடம்பிடித்த சோம் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார்.

இன்றைய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை ஒளிபரப்பாகயிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.