புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழந்தனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் நாள் பாரம்பரியமாக நடத்தப்படும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இப்பகுதியில் பிரசித்தி பெற்றது ஆகும்.

அதன்படி சிராவயலில் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்றன. இந்நிலையில் இப்போட்டியின்போது காளை மாடுகளை அடக்க முயன்ற 2 பேர் மாடு முட்டியதில் பலியாகினர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.