பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் இயக்குநர் சுசீந்திரனின் தாய், மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

இயக்குநர் சுசீந்திரனின் தாய் ஜெயலெட்சுமி இன்று காலை 11 மணியளவில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார், இவரின் இறுதி சடங்குகள் இன்று ஒட்டன்சத்திரத்தில் நடக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படம் நேற்றுதான் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள சூழலில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சுசீந்திரன், 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா, கென்னடி கிளப் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.