ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக உள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறவும், பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

image

இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளார் கிரண்பேடி. ஆளுநரை திரும்ப பெறக் கோரி அமைதி வழியில் நாங்கள் போராடுகிறோம். எங்களை அச்சமூட்டும் வகையில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எங்கள் போராட்டத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்” என்றார்.

<iframe width=”853″ height=”480″ src=”https://www.youtube.com/embed/O_p_P1QHL-g” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.