மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாக விருப்ப ஓய்வுபெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்திருக்கிறார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ் சகாயம். இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 7 வருடமாக பதவி வகித்து வந்தார்.

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே வி.ஆர்.எஸ் கேட்டு கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பித்திருந்தார். வி.ஆர்.எஸ் கேட்டு 3 மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து அரசு பதவியிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

image

விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாக தற்போது தெரிவித்திருக்கிறார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடுவது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.