கோவாக்சின் தடுப்பூசி அரசியலாக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் எம்.டி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ள விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள அந்நிறுவனத்தின் எம்.டி கிருஷ்ணா “கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. பிரிட்டன், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உட்பட 12 நாடுகளில் இந்த தடுப்பூசி பரிசோதனையை நடத்தியுள்ளோம். பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய நிறுவனம் மட்டுமல்ல, உலகளாவிய நிறுவனமாகும்.
கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக சர்வதேச அளவில் 70 கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். எனது குடும்ப உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை” என தெரிவித்திருக்கிறார்