நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விவசாயிகள் வங்கி கணக்கில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் நேரடியாக நிவாரணம் வரவு வைக்கப்படும். மானாவாரி மற்றும் பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500க்கு பதில் ரூ.20,000 வழங்கப்படும். 2 ஹெக்டேர் உச்ச வரம்பின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக அரசு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் பயனடைவர். 

பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரணத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புக்காக ரூ. 5.264.38 கோடி தேவை என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.