குடியரசுத் தினத்தன்று தடையை மீறி டெல்லிக்குள் நுழைவோம் என எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐந்து கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத சூழலில் அண்மையில் நடந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, நான்கு பிரச்னைகளில் இரு பிரச்னைகளில் கருத்தொற்றுமை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தக் கட்டமாக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

 image

நாளை மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் திடமாக உள்ள விவசாயிகள், 6 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.