கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுவிட்ட போதிலும், கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஜெனரல், “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிகள் அவசரகால சூழ்நிலையில் அனுமதி வழங்கப்படுகின்றன. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்த இரண்டு மருந்துகளையும் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸில் பராமரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.