தொ.ப., என்ற கண்ணாடி வழியே பெரியாரை அணுகுதல்!
கடந்த காலங்களில் நூல்கள் எனக்குள் பலவித புரிதல்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்று வரை ஏற்படுத்தி வருகின்றன. அறிவுசார் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன. ஆளுமைகளுடனான தொடர்புகளும் வாசிப்பின் வழியே கிடைத்துள்ளன. பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் என சமூக மாற்றத்திற்கான ஆளுமைகளை வாசித்த 1990-களின் தொடக்கக் காலங்கள் இனிமையான பொழுதுகளாக நினைவுகளில் தங்கியுள்ளன. அதுபோல, பெரியாரை வாசிக்கத் தொடங்கிய நாள் முதல் பெரியாரை ஒரு நேர்கோட்டுப் பார்வையாகவே கவனித்து வந்துள்ளேன். பெரியார் குறித்த விவாதங்கள் நண்பர்களிடையே வரும்போது, மையப் பொருளாக…