வாணியம்பாடி அருகே உழவர் சந்தைக்கு காய்கறி ஏற்றி வந்த இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செக்குமேடு பகுதியை சேர்ந்தர்கள் பவுன் மற்றும் ராஜகுமாரி. இவர்கள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர்.

image

பின்னர் அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வாணியம்பாடி – ஆலங்காயம் செல்வம் சாலையில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் சென்றபோது இரு சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பவுன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மேலும், அவரது உறவினரான ராஜ்குமாரி படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து. லாரி ஓட்டுநர் விஜய் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.