ஆஸ்திரேலிய அணி உடன் நாளை ஆரம்பமாக உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். விராட் கோலி மற்றும் முகமது ஷமி என இரண்டு அனுபவ வீரர்கள் இந்த தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியை விராட் கோலிக்கு பதிலாக ரஹானே வழிநடத்துவார் என முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிளெயிங் 11 அறிவித்துள்ளது பிசிசிஐ.
அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்?
ரஹானே (கேப்டன்), மயங்க் அகர்வால், சுப்மன் கில் (அறிமுகம்), புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் (அறிமுகம்) ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
விராட் கோலிக்கு மாற்றாக ஆல் ரவுண்டர் ஜடேஜாவும், பிருத்வி ஷாவுக்கு மாற்றாக கில்லும், ஷமிக்கு மாற்றாக சிராஜும் விளையாட உள்ளனர். அதே நேரத்தில் அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
ALERT?: #TeamIndia for 2nd Test of the Border-Gavaskar Trophy against Australia to be played in MCG from tomorrow announced. #AUSvIND pic.twitter.com/4g1q3DJmm7
— BCCI (@BCCI) December 25, 2020